10 1
இலங்கைசெய்திகள்

யாழ்.செம்மணியில் நடைபெறவுள்ள போராட்டம்: தமிழரசுக் கட்சி விடுத்துள்ள அறிவிப்பு

Share

யாழ்ப்பாணம் அரியாலை – சிந்துபாத்தி புதைகுழி தொடர்பாக உண்மை கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று கோரி நடைபெறவுள்ள போராட்டத்திற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், “யாழ்ப்பாணம் அரியாலை சிந்துபாத்தி புதைகுழி ஆய்வு தொடர்பாக உண்மை கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என ”மக்கள் செயல்” என்ற தன்னார்வ இளையோர் அமைப்பு ”அணையா விளக்கு” மூன்று நாள் கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருக்கின்றது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு தெரிவிக்கும் முகமாக இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் யாவரும் எதிர்வரும் 24.06.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09.30 முதல் நண்பகல் 1.30 மணி வரை கலந்து கொண்டு எமது கட்சியின் ஆதரவினை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.இலங்கை உணவகம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வருகையின் போது நாம் ஒற்றுமையாக இந்த கோரிக்கையையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை வலியுறுத்திய இந்த கவனயீர்ப்பு மிக முக்கியமானது என்பதும் சுட்டிக் காட்டப்படுகின்றது.” என குறிப்பிட்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...