arrest 1200px 28 08 2024 1000x600 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ரூ. 8 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு மதுபானம்: 69 போத்தல்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் கைது!

Share

எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களைச் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்து, அவற்றைக் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவர் இன்று (டிசம்பர் 13) அதிகாலை விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடைய, மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் இவர் இன்று அதிகாலை 12.30 மணிக்கு டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான சேவையின் EK-648 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

இவர் கொண்டு வந்திருந்த பயணப் பொதிகளுக்குள் 69 மதுபான போத்தல்களை மறைத்து வைத்திருந்த போது, பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது இவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த மதுபான போத்தல் தொகையுடன் நாளை மறுநாள் (டிசம்பர் 15) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Share
தொடர்புடையது
bb70ef27 25f3 4d2d aac2
உலகம்செய்திகள்

மசகு எண்ணெய் கடத்தல்: ஈரானுக்கு உதவிய வெனிசுலா கப்பல் நிறுவனம், 6 கப்பல்களுக்கு அமெரிக்கா புதிய தடை!

கரீபியன் கடற்பகுதி வழியாக ஈரானுக்கு மசகு எண்ணெய் கடத்திச் செல்ல உதவியதாக வெனிசுலா மீது குற்றம்...

National Strategy child sexual abuse
உலகம்செய்திகள்

இலங்கைப் பிரஜை மீதான சிறுமி கடத்தல், துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள்: மேற்கு லண்டன் நீதிமன்றில் மறுப்பு!

மேற்கு லண்டனில் உள்ள அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட புகலிட விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 20...

articles2FxGu0xvsmkR7xnWvm5gj0
செய்திகள்விளையாட்டு

மறுநாள் ஜோன் சினாவின் கடைசி WWE போட்டி: குந்தரை எதிர்கொள்கிறார் ஜாம்பவான்!

மல்யுத்த வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான WWE ஜாம்பவான் ஜோன் சினா, தனது புகழ்பெற்ற இரண்டு...

kidney 2025 02 64c4dfaad03050762c0097e951e0a6ec 3x2 1
இந்தியாசெய்திகள்

சிறுநீரக செயலிழப்பு: இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 இலட்சம் பேர் உயிரிழப்பு – 7 கோடி மக்கள் நாள்பட்ட நோயால் அவதி!

இந்தியாவில் ஆண்டுக்கு இரண்டரை இலட்சம் பேர் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள்...