tamilni 215 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

Share

இலங்கை வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் என்ற போர்வையில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு வர்த்தகர்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்பில் வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு விலையை மீறி சீனி விற்பனை செய்யவதாகவும் சீனியை மறைத்து வைத்திருப்பதாகவும் குற்றம் சுமத்தி அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பணம் வழங்குமாறு கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு ஒரு கும்பல் ஒன்று வர்த்தகர்களுக்கு அழைப்பு எடுத்து பணம் பறித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் கிடைக்கப்பெற்றால் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறு நுகர்வோர் அதிகாரசபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இதைவேளை சீனியின் கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கு சீனி விற்பனை செய்த 300 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த 10 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளின் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டுப்பாட்டு விலையை மீறி சீனி விற்பனை செய்து வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வழக்கு தொடரப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

 

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...