14 3
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் பேரணிக்கு வருகைத்தந்த பேருந்துகள் தொடர்பில் விசாரணை

Share

தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணிக்காக வருகைத்தந்த பேருந்துகள் சில அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நெடுஞ்சாலையில் நின்று உணவருந்தியமை தொடர்பிலேயே குறித்த பேருந்துகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வெலிப்பண்ண பகுதிக்கு அருகில் குறித்த பேருந்துகளின் சாரதிகள் வீதியில் பேருந்தை நிறுத்தி மதிய உணவு இடைவேளை எடுப்பதைக் காட்டும் காணொளியானது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அப்படி நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அதிவேக நெடுஞ்சாலையிலோ அல்லது நெடுஞ்சாலையின் எந்தப் பகுதியிலோ வாகனங்களை நிறுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...