20
இலங்கைசெய்திகள்

பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

Share

பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் எரிபொருள் விலை திருத்தப்பட்டுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று(30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒட்டோ டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பேருந்து கட்டணம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,“ தற்போது நாம் பயன்படுத்தும் ஒட்டோ டீசலின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போது பேருந்து கட்டணத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம்.

இந்த முறை எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், அது பேருந்து கட்டணத்தில் தாக்கம் செலுத்தாது.

கட்டண திருத்தத்துக்கான சூத்திரத்தின் அடிப்படையில் இந்த முறை பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது”என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...