5 34
இலங்கைசெய்திகள்

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

Share

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 2025 பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

மாத்தறை, தங்காலையில், நேற்று (19.10.2024) இடம்பெற்ற பிரசார நிகழ்வில் அவர் இதனை அறிவித்துள்ளார்.

அரச துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பது, பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்குவது மற்றும் பின்தங்கிய மற்றும விசேட தேவைக்கொண்ட சமூகங்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பது குறித்தும் இந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவு கவனம் செலுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இவ்வாறான ஓர் பின்னணியில் வரவு செலவுத் திட்டத்தை விரைவாக சமர்ப்பிப்பது பொருத்தமானதல்ல என முன்னதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதனால் எதிர்வரும் வருடம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...