1 43
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் பட்ஜெட்: மருத்துவதுறையிலிருந்து கிளம்பும் போர்க்கொடி

Share

முந்தைய எந்த அரசாங்கத்தையும் போலல்லாமல், தற்போதைய அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மருத்துவர்களை மிகவும் கடினமான நிலையில் வைத்துள்ளதாகவும், மருத்துவர்களின் ஆதரவையும் பெற்ற அரசாங்கம், மருத்துவர்களை கடினமான நிலையில் வைத்துள்ளதாகவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணை பணிப்பாளருமான வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனா (Dr. Rukshan Bellana) தெரிவித்தார்.

மருத்துவர்களின் தரத்தை கூட குறைத்து பட்ஜெட்டை தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறும் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனா, எந்தவொரு பட்ஜெட்டும் அரசு ஊழியர்களை இவ்வளவு மோசமான சூழ்நிலையில் வைத்ததில்லை என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்(anura kumara dissanayake) அரசாங்கத்தின் நியமனத்தை 80 சதவீதத்திற்கும் அதிகமான மருத்துவர்கள் ஆதரித்ததாகவும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சுமார் 15 மருத்துவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தச் சட்டத்தின் மூலம் மருத்துவர்களின் மொத்த சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் கூடுதல் சேவை கொடுப்பனவு அடிப்படை சம்பளத்தில் 80வது பங்காகவும், விடுமுறை கொடுப்பனவு அடிப்படை சம்பளத்தில் 20வது பங்காகவும் இருந்ததாகவும், பட்ஜெட்டில் இந்த கொடுப்பனவுகள் முறையே 1 இல் 120வது பங்காகவும், 1 இல் 30வது பங்காகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எந்த வகையிலும் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளருமான வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...