tamilni 210 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையர்கள் சந்திக்கப் போகும் மிகக் கடினமான காலம்

Share

இலங்கையர்கள் சந்திக்கப் போகும் மிகக் கடினமான காலம்

2024ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் மிகவும் கடினமானவையாக அமையும். அதன் பின்னர் சிறிது சிறிதாக எம்மால் மீண்டெழ முடியும். இந்த வருடத்தில் உள்நாட்டு உற்பத்தியில் ஓரளவு இலக்கை அடைந்துள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

எனினும், 2018ஆம் ஆண்டின் அப்போதைய நிலைமைக்கு வரவில்லை. அடுத்த வருடத்திலும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாது. பொருளாதார நெருக்கடியின் காரணமாக 1985ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலைமையை நாங்கள் அடைந்துள்ளோம்.

2025ஆம் ஆண்டில் இருந்தே எமது பயணத்தை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அதற்கு நாம் அனைவரும் தயாராக வேண்டும்.

இதேவேளை, கடந்த ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்னர் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானித்தோம்.

எனினும் அந்த முயற்சி சற்று பின்னடைவை சந்தித்தது. முதலில் நாங்கள் சம்பள அதிகரிப்பை வழங்கமாட்டோம் என தொழிற்சங்கங்கள் எண்ணின.

இறுதியில், இதனையும் வழங்கமாட்டோம் என எண்ணி அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்க ஆரம்பித்தனர்.

10ஆயிரம் ரூபா என தெரிந்த பின்னர் வீதியில் இறங்கி போராடி 20 ஆயிரம் ரூபா வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதுவே நடந்தது.

10 ஆயிரம் ரூபா நிச்சயமாக வழங்கப்படும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். சம்பளத்தை நான் அதிகரிப்பதாக கூறியதன் பின்னரே அவர்கள் இருபதாயிரம் ரூபாவை கோரினர் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...