tamilni 210 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையர்கள் சந்திக்கப் போகும் மிகக் கடினமான காலம்

Share

இலங்கையர்கள் சந்திக்கப் போகும் மிகக் கடினமான காலம்

2024ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் மிகவும் கடினமானவையாக அமையும். அதன் பின்னர் சிறிது சிறிதாக எம்மால் மீண்டெழ முடியும். இந்த வருடத்தில் உள்நாட்டு உற்பத்தியில் ஓரளவு இலக்கை அடைந்துள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

எனினும், 2018ஆம் ஆண்டின் அப்போதைய நிலைமைக்கு வரவில்லை. அடுத்த வருடத்திலும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாது. பொருளாதார நெருக்கடியின் காரணமாக 1985ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலைமையை நாங்கள் அடைந்துள்ளோம்.

2025ஆம் ஆண்டில் இருந்தே எமது பயணத்தை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அதற்கு நாம் அனைவரும் தயாராக வேண்டும்.

இதேவேளை, கடந்த ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்னர் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானித்தோம்.

எனினும் அந்த முயற்சி சற்று பின்னடைவை சந்தித்தது. முதலில் நாங்கள் சம்பள அதிகரிப்பை வழங்கமாட்டோம் என தொழிற்சங்கங்கள் எண்ணின.

இறுதியில், இதனையும் வழங்கமாட்டோம் என எண்ணி அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்க ஆரம்பித்தனர்.

10ஆயிரம் ரூபா என தெரிந்த பின்னர் வீதியில் இறங்கி போராடி 20 ஆயிரம் ரூபா வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதுவே நடந்தது.

10 ஆயிரம் ரூபா நிச்சயமாக வழங்கப்படும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். சம்பளத்தை நான் அதிகரிப்பதாக கூறியதன் பின்னரே அவர்கள் இருபதாயிரம் ரூபாவை கோரினர் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...