tamilni 182 scaled
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்

Share

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்\

அடுத்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (13.11.2023) வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.

அரச துறையினருக்கு 10 ஆயிரம் ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் தனியார் துறையினருக்கு எந்த ஒரு சலுகைகளும் வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என்ற குற்றஞ்சாட்டப்படுகிறது.

அரச துறையை காட்டிலும் பல இலட்சம் பேர் தனியார் துறையில் சேவையாற்றுகிறார்கள். தனியார் துறை தொடர்பில் கவனத்திற் கொள்ளப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கான வரவுசெலவுத் திட்டம் என பலரும் விமர்சித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...