இலங்கைசெய்திகள்

போதைக்கு அடிமையான பிக்குவுக்கு நீதிமன்றின் உத்தரவு!!

Share
12
Share

போதைக்கு அடிமையான பிக்குவுக்கு நீதிமன்றின் உத்தரவு!!

போதைக்கு அடிமையான பிக்குக்கு புனர்வாழ்வளிக்குமாறு கோட்டை நீதவான் நீதிபதி திலிண கமகே உத்தரவிட்டுள்ளார். கடந்த 19ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிசார் மேற்கொண்ட வாகன சோதனையின் போது முச்சக்கர வண்டியொன்றில் மதுபோதையுடன் பயணித்துக் கொண்டிருந்த பௌத்த பிக்கு ஒருவரைக் கண்டு அவரை சோதனையிட்டுள்ளனர்.

அதன் போது அவரது கையில் இருந்த திருவோடு போன்ற பாத்திரத்தினுள் 40 மில்லிகிராம் ஹெரோயினும், 200 மில்லி கிராம் கஞ்சாவும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் குறித்த பௌத்த பிக்குவை கைது செய்து சட்ட மருத்துவ அதிகாரி மூலமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அவர் மது மற்றும் போதைமருந்து உட்கொண்டுள்ளது தெரியவந்திருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த பௌத்த பிக்கு கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, தான் ஒரு நோயாளி என்றும், அபராதத் தொகையொன்றை விதித்து தன்னை விடுதலை செய்யுமாறும் நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

எனினும் அபராதத்துடன் விடுதலை செய்தால் பௌத்த தர்மத்துக்கு இழுக்கு ஏற்படும் என்று குறிப்பிட்ட நீதவான் திலிண கமகே, குறித்த பௌத்த பிக்குவை பொருத்தமான புனர்வாழ்வு முகாம் ஒன்றில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...