rtjy 80 scaled
இலங்கைசெய்திகள்

சிகப்பு சீனி தொடர்பில் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

Share

சிகப்பு சீனி தொடர்பில் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் வெள்ளை சீனியை சிகப்பு சீனியாக மாற்றும் மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெனியாய ஹான்போட் பிரதேசத்தில் நீண்ட காலமாக சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய வகையில் வெள்ளை சீனியை சிகப்பு சீனியாக மாற்றும் தொழிற்சாலையொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலை மற்றும் களஞ்சியசாலையில் இருந்து 2000 கிலோ கிராம் நிறையுடைய சீனி மீட்கப்பட்டுள்ளது.

இதற்காக பயன்படுத்தப்பட்ட இயந்திர சாதனங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதற்கமைய சீனியில் கலப்படம் செய்வதற்காக சீமெந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சுற்றிவளைப்பின்போது சீமெந்து கலவை, தராசு, எரிவாயு அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
BIA 692136
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம் – பயணிகளுக்கு கிடைத்துள்ள நன்மை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, பிரத்தியேகமாக தானியங்கி...

25 68f3aa6750683
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது! – தகவல் கசிவு குறித்து கவலை

யாழ்ப்பாணம் – மணியம் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் போதைப்பொருளுடன் நேற்று...

Estate
செய்திகள்இலங்கை

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு: கம்பனிகளின் புறக்கணிப்பால் குழப்பம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான சம்பள நிர்ணய சபை கூட்டம் நேற்று (அக்டோபர் 18)...

images 2
செய்திகள்இலங்கை

சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாகப் பரவும் செய்தி – பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காலமானதாகச் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகச் செய்திகள் பரவி வருகின்றன....