செய்திகள்அரசியல்இலங்கை

அண்ணே எனக்கும் ஒரு காஸ் தாங்கோ!! – பின்னால் சென்ற எம்.பி!!

Share
static image cdn
Share

 

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு களை கட்டியுள்ள நிலையில் எரிவாயு வாகனத்தை துரத்தி சென்று எம்.பி ஒருவர் காஸ் கொள்வனவு செய்த சுவாரஸ்ய சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டயனா க​மகே. அவருடைய வீட்டில் பயன்படுத்தப்பட்ட சமையல் எரிவாயு தீர்ந்து விட்டதையடுத்து எரிவாயு தேடிக்கொண்டு வீதியில் அலைந்து திரிந்துள்ளார்.

இந்நிலையில், பெலவத்தையிலுள்ள லிட்ரோ முகவரிடம் காஸ் இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய அங்குச் சென்றபோது காஸ் தீர்ந்துவிட்டது.

சளைக்காத அவர் தனது ஆதரவாளர்களின் உதவியுடன் அத்துருகிரியவில் காஸ் இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய அங்கும் சென்றுள்ளார். ஆனால் தொடர் ஏமாற்றம்.

இன்றைய நாள் எனக்கு காஸ் வாங்குவதுடனேயே சென்று விடுமோ? என எண்ணிய சமயம் அவருடைய கண்களில் நீலநிற எரிவாயுக்களை ஏற்றிய நீண்ட வண்டி ஒன்று தென்பட்டுள்ளது.

உடனடியாக அத்துருகியவில் இருந்து துரத்திய அவர் ஒருவாறு ஒருவல பிரதேசத்தில் உள்ள மொத்த விற்பனை நிலையத்திற்கு முன்னால் மடக்கி பிடித்தார்.

பின்பு தன்னை பாராளுமன்ற உறுப்பினர் என அறிமுகப்படுத்திய அவர் காஸ் முகவர் நிலையத்தில் சிலிண்டர்கள் இறக்கப்பட்டதன் பின்னர், சிலிண்டொன்றை வாங்கிக்கொண்டு வீடுத் திரும்பியுள்ளார்.
#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...