rtjy 317 scaled
இலங்கைசெய்திகள்

காலிமுகத்திடல் போராட்ட காணொளிகளை பகிர்ந்த குற்றச்சாட்டு: பிரித்தானிய பெண் கூறியுள்ள விடயம்

Share

காலிமுகத்திடல் போராட்ட காணொளிகளை பகிர்ந்த குற்றச்சாட்டு: பிரித்தானிய பெண் கூறியுள்ள விடயம்

இலங்கையில் 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் போது கிளர்ச்சி காணொளிகளை பகிர்ந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரித்தானிய சமூக ஊடகப் பெண், தாம் தொடர்ந்தும் இலங்கையில் தலைமறைவு வாழ்க்கையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய இணையம் ஒன்றுக்கு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

13 மாதங்கள் மறைந்திருந்த நிலையில் தாம் நம்பிக்கையை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

35 வயதான Kayleigh Fraser, இலங்கையில் தங்கியிருந்தபோது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை குடியேற்ற அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது அவர் தவறான விசாவில் நாட்டிற்கு வருகை தந்ததாக கூறி அவரது கடவுச்சீட்டை அதிகாரிகள் கைப்பற்றினார்.

Fraser, தனது இன்ஸ்டாகிராமில் காலிமுகத்திடல் போராட்டங்களின் காணொளிகளை பகிரத் தொடங்கிய பின்னரே, அதிகாரிகள் அவரின் வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

அத்துடன் அவரை நாட்டில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டனர். இலங்கையின் உயர்நீதிமன்றம், அதிகாரிகள் பிறப்பித்த நாடுகடத்தல் உத்தரவை உறுதி செய்தது.

எனினும் நாட்டின் மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில், இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய தாம் பயப்படுவதாக Fraser கூறியுள்ளார்.

இந்த நிலையில் பிரித்தானியாவின் வடகிழக்கு ஃபைஃப் பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வெண்டி சேம்பர்லெய்ன் நாட்டின் வெளியுறவு அலுவலக அதிகாரிகளை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது Fraser இலங்கை நாட்டை விட்டு வெளியேற உத்தரவாதம் அளிக்கப்படுவார் என்ற எழுத்துப்பூர்வ உறுதிமொழியை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தகைய உத்தரவாதங்கள் வழங்கப்படும், தாம் மறைவிலிருந்து வெளியே வர முடியாது என்று Fraser கூறியுள்ளார். இலங்கையில் தற்போது தாம் வாழும் வாழ்க்கையை வாழ்க்கையாக அங்கீகரிக்கவில்லை.

இங்கே அதிகாரத்தில் இருக்கும் இந்த பைத்தியக்காரர்களின் தயவில் ஒட்டுமொத்த உலகமும் தம்மை கைவிட்டது போல் தாம் உணர்வதாக Fraser தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...