3 30
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தியதாக கூறப்படும் பிரித்தானிய யுவதி: சர்வதேச ஊடகங்களில் முக்கியத்துவம்

Share

இலங்கைக்கு 46 கிலோ கிராம் போதைப்பொருளை கடத்தி வந்ததாக கூறப்படும் பிரித்தானிய யுவதி தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன. அதேநேரம் இந்த செய்தி உலகளாவிய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்த அவரின் இரண்டு பயணப்பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருட்கள், கடந்த 12ம் திகதியன்று கைப்பற்றப்பட்டன.

எனினும் இந்த போதைப்பொருள், தமது பயணப்பொதியில் வைக்கப்பட்டமை தமக்கு தெரியாது என்று குறித்த யுவதி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருவதற்கு முன்னர் தாம் குறித்த பயணப்பொதியில் தேவையான பொருட்களை எடுத்து வைத்ததாக குறிப்பிட்ட அவர், இறுதியாக புறப்படுவதற்கு முன்னர், குறித்த பொதிகளை பரிசோதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் போதைப்பொருட்களை யார் தமது பயணப்பொதிகளில் வைத்திருப்பார்கள் என்பது தம்மால் ஊகிக்கமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அதே நாளன்று, தாய்லாந்தில் இருந்து ஜோர்ஜியாவுக்கு சென்ற மற்றுமொரு பிரித்தானிய யுவதியிடம் இருந்து அந்த நாட்டின் அதிகாரிகள் போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

எனவே இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்புகள் இருக்குமா என்பது குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...