17 25
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 25 வருடங்களின் பின்னர் நிறைவேற்றப்பட்ட,பிரித்தானிய கடற்படை அதிகாரியின் இறுதி ஆசை

Share

இலங்கையில் 25 வருடங்களின் பின்னர் நிறைவேற்றப்பட்ட,பிரித்தானிய கடற்படை அதிகாரியின் இறுதி ஆசை

பிரித்தானிய கடற்படை அதிகாரி ஒருவரின் அஸ்தியை இலங்கையில் உள்ள மூலோபாய தளத்தில் கரைக்கவேண்டும் என்ற இறக்கும் முன்னதாக அவரின் விருப்பம், அவர் இறந்து 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.

லெப்டினன்ட் நோர்மன் ஸ்கோஃபீல்ட் திருகோணமலையில் தகவல் தொடர்பு அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

இந்த பதவி, இரண்டாம் உலகப் போரின் போது, இலங்கை நாட்டின் கிழக்குக் கடற்கரையில் நேச நாட்டுப் படைகளுக்கு ஒரு முக்கிய பதவியாக கருதப்பட்டுள்ளது. எனினும், தமது ஸ்கோஃபீல்டின் விருப்பம் அதிகாரத்துவ தடைகளால் தாமதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சாம்பலைச் தூவும் நடைமுறையை நாடு தடைசெய்துள்ளதால் அதற்கு இடமளிக்க முடியவில்லை என்று இலங்கையின் கடற்படை தெரிவித்துவந்தது.

எனினும், இராஜதந்திர வழிகள் மூலம் கோரிக்கைகளைத் தொடர்ந்து, அதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அவரது மனைவியான மேரியின் அஸ்தியும் கடந்த வெள்ளிக்கிழமை(27) திருகோணமலையில் ஒன்றாக இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 14 இலங்கையின் கடற்படை உறுப்பினர்களின் மரியாதையுடன் பிரித்தானிய அதிகாரி மற்றும் அவரின் மனைவி ஆகியோரின் அஸ்திகள், திருகோணமலை கடற்படை கப்பல்துறையின் ஒஸ்டன்பேர்க் முனைக்கு அருகில் கடலில் கரைக்கப்பட்டுள்ளது.

குறித்த இடம் முன்னதாக பிரித்தானிய அதிகாரியின் இதயத்திற்கு மிகவும் பிடித்த இடம் என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

பிரித்தானிய இராஜதந்திரி டேரன் வூட்ஸடன் கடற்படைத் தளபதி பிரியந்த பெரேராவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

ஸ்கோஃபீல்ட் 1957 இல் திருகோணமலையில் பணியாற்றினார், அப்போது திருகோணமலை துறைமுகம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து அப்போதைய இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டிருந்தது.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...