இலங்கைசெய்திகள்

இலங்கையில் 25 வருடங்களின் பின்னர் நிறைவேற்றப்பட்ட,பிரித்தானிய கடற்படை அதிகாரியின் இறுதி ஆசை

Share
17 25
Share

இலங்கையில் 25 வருடங்களின் பின்னர் நிறைவேற்றப்பட்ட,பிரித்தானிய கடற்படை அதிகாரியின் இறுதி ஆசை

பிரித்தானிய கடற்படை அதிகாரி ஒருவரின் அஸ்தியை இலங்கையில் உள்ள மூலோபாய தளத்தில் கரைக்கவேண்டும் என்ற இறக்கும் முன்னதாக அவரின் விருப்பம், அவர் இறந்து 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.

லெப்டினன்ட் நோர்மன் ஸ்கோஃபீல்ட் திருகோணமலையில் தகவல் தொடர்பு அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

இந்த பதவி, இரண்டாம் உலகப் போரின் போது, இலங்கை நாட்டின் கிழக்குக் கடற்கரையில் நேச நாட்டுப் படைகளுக்கு ஒரு முக்கிய பதவியாக கருதப்பட்டுள்ளது. எனினும், தமது ஸ்கோஃபீல்டின் விருப்பம் அதிகாரத்துவ தடைகளால் தாமதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சாம்பலைச் தூவும் நடைமுறையை நாடு தடைசெய்துள்ளதால் அதற்கு இடமளிக்க முடியவில்லை என்று இலங்கையின் கடற்படை தெரிவித்துவந்தது.

எனினும், இராஜதந்திர வழிகள் மூலம் கோரிக்கைகளைத் தொடர்ந்து, அதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அவரது மனைவியான மேரியின் அஸ்தியும் கடந்த வெள்ளிக்கிழமை(27) திருகோணமலையில் ஒன்றாக இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 14 இலங்கையின் கடற்படை உறுப்பினர்களின் மரியாதையுடன் பிரித்தானிய அதிகாரி மற்றும் அவரின் மனைவி ஆகியோரின் அஸ்திகள், திருகோணமலை கடற்படை கப்பல்துறையின் ஒஸ்டன்பேர்க் முனைக்கு அருகில் கடலில் கரைக்கப்பட்டுள்ளது.

குறித்த இடம் முன்னதாக பிரித்தானிய அதிகாரியின் இதயத்திற்கு மிகவும் பிடித்த இடம் என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

பிரித்தானிய இராஜதந்திரி டேரன் வூட்ஸடன் கடற்படைத் தளபதி பிரியந்த பெரேராவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

ஸ்கோஃபீல்ட் 1957 இல் திருகோணமலையில் பணியாற்றினார், அப்போது திருகோணமலை துறைமுகம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து அப்போதைய இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டிருந்தது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...