இலங்கை போலீசாருக்கு பயிற்சி வழங்கும் பிரிட்டன்!!

br

பிரிட்டன் பாதுகாப்பு பிரிவினர் இலங்கை போலீசாருக்கு பயிற்சி வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இலங்கையில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அதிகரித்துவரும் கரிசனைகள் காரணமாக ஸ்காட்லாந்து போலீசார் இலங்கை போலீசாருக்கு பயிற்சி வழங்குவதை ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளனர்.

எனினும் பிரிட்டன் இலங்கை போலீசாருக்கு பயிற்சி வழங்க தாம் தயார் என தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதி நீதி திட்டத்தின் பணிப்பாளர்,இந்த செய்தி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது .

தனது நடவடிக்கையை தொடர போவதில்லை என ஸ்கொட்லாந்து அறிவித்தபோது அது வலுவான செய்தியை தெரிவித்தது.

ஐக்கிய ராஜ்ஜியம் இலங்கையில் நடைபெறும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கின்றது என்ற செய்தியையும் தெரிவித்தது.

ஆனால் பிரிட்டனின் இந்த செய்தி கதவுகளை திறந்து உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்கொட்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் விலால்பா பிரிட்டனின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளார்.

பிரிட்டனின் முந்திய உதவி இலங்கையில் மனித உரிமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என தெரிவித்துள்ள அவர் தற்போது அதிகரித்த மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கைகள் கிடைத்துள்ளன.

இதன் காரணமாக இலங்கை படையினருக்கு மேலும் பயிற்சிகளை வழங்குவது குறித்து பிரிட்டன் சிந்திப்பது மன்னிக்க முடியாதது எனவும் அவர் தெரிவித்தார்.

#SrilankaNews

 

Exit mobile version