tamilni 300 scaled
இலங்கைசெய்திகள்

புகலிடக்கோரிக்கையாளர்களை வைத்து பிரித்தானியா செய்யும் சதி

Share

புகலிடக்கோரிக்கையாளர்களை வைத்து பிரித்தானியா செய்யும் சதி

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்ப பிரித்தானியா முயன்று வருகின்றது.

ஆனால், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவது சட்டவிரோதம், அது பாதுகாப்பான மூன்றாவது நாடு அல்ல என தீர்ப்பளித்துவிட்டார்கள். பிரித்தானிய அரசு ருவாண்டாவை பாதுகாப்பான நாடு என்கிறது.

இதேவேளை ருவாண்டா நாட்டவர்களுக்கு பிரித்தானிய புகலிடம் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய அரசு கூறுவதுபோல் ருவாண்டா பாதுகாப்பான நாடாக இருக்குமானால், அந்த நாட்டவர்கள் ஏன் பிரித்தானியாவில் புகலிடம் கோர வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டிலிருந்து, பிரித்தானியா சுமார் 40 ருவாண்டா நாட்டவர்களுக்கு புகலிடம் வழங்கியுள்ளமை அதிகாரப்பூர்வ தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.

2011க்கும் 2021க்கும் இடையில், தங்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று கூறி புகலிடம் கோரிய 37 ருவாண்டா நாட்டவர்களுக்கு பிரித்தானியா புகலிடம் வழங்கியுள்ளது.

ருவாண்டா பாதுகாப்பான நாடு என பிரித்தானிய அரசு கூறுகிறது. ஆனால், பிரித்தானிய உள்துறை அமைச்சகம் ருவாண்டா பாதுகாப்பான நாடு அல்ல என்பதை அங்கீகரித்துள்ளது.

அப்படியானால், ருவாண்டா நாட்டவர்களுக்கே ருவாண்டா பாதுகாப்பான நாடு அல்ல என்றால், மற்ற நாட்டவர்களுக்கு மட்டும் அது எப்படி பாதுகாப்பான நாடாக இருக்கும் என்பது எனக்கு புரியவில்லை என புலம்பெயர்தல் நிபுணரும், Durham பல்கலைப் பேராசிரியருமான Thom Brooks கூறியுள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...