tamilni 300 scaled
இலங்கைசெய்திகள்

புகலிடக்கோரிக்கையாளர்களை வைத்து பிரித்தானியா செய்யும் சதி

Share

புகலிடக்கோரிக்கையாளர்களை வைத்து பிரித்தானியா செய்யும் சதி

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்ப பிரித்தானியா முயன்று வருகின்றது.

ஆனால், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவது சட்டவிரோதம், அது பாதுகாப்பான மூன்றாவது நாடு அல்ல என தீர்ப்பளித்துவிட்டார்கள். பிரித்தானிய அரசு ருவாண்டாவை பாதுகாப்பான நாடு என்கிறது.

இதேவேளை ருவாண்டா நாட்டவர்களுக்கு பிரித்தானிய புகலிடம் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய அரசு கூறுவதுபோல் ருவாண்டா பாதுகாப்பான நாடாக இருக்குமானால், அந்த நாட்டவர்கள் ஏன் பிரித்தானியாவில் புகலிடம் கோர வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டிலிருந்து, பிரித்தானியா சுமார் 40 ருவாண்டா நாட்டவர்களுக்கு புகலிடம் வழங்கியுள்ளமை அதிகாரப்பூர்வ தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.

2011க்கும் 2021க்கும் இடையில், தங்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று கூறி புகலிடம் கோரிய 37 ருவாண்டா நாட்டவர்களுக்கு பிரித்தானியா புகலிடம் வழங்கியுள்ளது.

ருவாண்டா பாதுகாப்பான நாடு என பிரித்தானிய அரசு கூறுகிறது. ஆனால், பிரித்தானிய உள்துறை அமைச்சகம் ருவாண்டா பாதுகாப்பான நாடு அல்ல என்பதை அங்கீகரித்துள்ளது.

அப்படியானால், ருவாண்டா நாட்டவர்களுக்கே ருவாண்டா பாதுகாப்பான நாடு அல்ல என்றால், மற்ற நாட்டவர்களுக்கு மட்டும் அது எப்படி பாதுகாப்பான நாடாக இருக்கும் என்பது எனக்கு புரியவில்லை என புலம்பெயர்தல் நிபுணரும், Durham பல்கலைப் பேராசிரியருமான Thom Brooks கூறியுள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...