25 6843df00be801
இலங்கைசெய்திகள்

சிங்கப்பூரில் மறைந்துள்ள இலங்கை தமிழருக்கு எதிராக சர்வதேச ரீதியாக நடவடிக்கை

Share

ஊழல் ஒழிப்பு நாடான சிங்கப்பூர், மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தாமல் இருப்பதற்கு நியாயமான காரணங்களை வழங்காவிட்டால், சர்வதேச மன்றங்களில் அதனை கேள்விக்குட்படுத்த முடியும் என உயர் நீதிமன்ற நீதியரசர் ரங்கா திசாநாயக்க கூறியுள்ளார்.

குறித்த கருத்தை அவர் நேற்று வெளியிட்டுள்ளார்.

சர்வதேச ஊழல் தொடர்பான குறியீட்டான சி.பி.ஐ குறியீட்டில், சிங்கப்பூர் மூன்றாவது இடத்திலும், இலங்கை 121வது இடத்திலும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக ஊழல்வாதிகளுக்கு எதிராக சர்வதேச சபைகளில் வாதங்களை முன்வைக்கமுடியும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், பொது அதிகாரிகள் செய்யும் அனைத்து செயல்களும் ஊழலாக கருதப்படுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும், பொது அதிகாரிகள் செய்யும் எந்தவொரு செயலும் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் அல்லது வேறு தனி ஒருவருக்கு நன்மை பயக்கும் என்பதை அறிந்து வேண்டுமென்றே அல்லது தெரிந்தே செய்யப்பட்டால், அது ஊழலாகக் கருதப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில சந்தர்ப்பங்களில், அரசின் சில பிரிவுகளை சட்டத்தின் எல்லைக்கு வெளியே பொதுமக்களின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது என்றும் விவாதித்துள்ளார்.

அத்தகைய நேர்மையான நோக்கத்துடன் செயல்படும் பொது அதிகாரிகள் பயப்படக்கூடாது எனவும் விளக்கியுள்ளார்.

கடந்த காலங்களில் இருந்து ஊழல் ஆதரவு நபர்களால் அரசாங்கம் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது என்றும் ரங்கா திசாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
1685686384 NBRO warns of landslide risks in several areas L
செய்திகள்இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கையை தேசிய...

suryakumar salman agha 1200 1760670009
செய்திகள்உலகம்

வான்வழித் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி: முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகல்

வான்வழித் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி: முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகல் பாகிஸ்தான்...

23 652cc44949045
செய்திகள்இலங்கை

இஷாரா செவ்வந்தியை காதலிக்கவில்லை: நாமல் ராஜபக்ச திட்டவட்டம்

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியைத் தான் காதலிக்கவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன...

25 68f24a1996c31
இலங்கைசெய்திகள்

வடக்கு மாகாண இடமாற்றச் சபை விவகாரம்: ஆளுநர் அறிக்கை தொடர்பில் ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

வடக்கு மாகாண ஆளுநரின் ஊடக அறிக்கை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் ஒரு தெளிவுபடுத்தல் அறிக்கையை...