25 6843df00be801
இலங்கைசெய்திகள்

சிங்கப்பூரில் மறைந்துள்ள இலங்கை தமிழருக்கு எதிராக சர்வதேச ரீதியாக நடவடிக்கை

Share

ஊழல் ஒழிப்பு நாடான சிங்கப்பூர், மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தாமல் இருப்பதற்கு நியாயமான காரணங்களை வழங்காவிட்டால், சர்வதேச மன்றங்களில் அதனை கேள்விக்குட்படுத்த முடியும் என உயர் நீதிமன்ற நீதியரசர் ரங்கா திசாநாயக்க கூறியுள்ளார்.

குறித்த கருத்தை அவர் நேற்று வெளியிட்டுள்ளார்.

சர்வதேச ஊழல் தொடர்பான குறியீட்டான சி.பி.ஐ குறியீட்டில், சிங்கப்பூர் மூன்றாவது இடத்திலும், இலங்கை 121வது இடத்திலும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக ஊழல்வாதிகளுக்கு எதிராக சர்வதேச சபைகளில் வாதங்களை முன்வைக்கமுடியும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், பொது அதிகாரிகள் செய்யும் அனைத்து செயல்களும் ஊழலாக கருதப்படுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும், பொது அதிகாரிகள் செய்யும் எந்தவொரு செயலும் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் அல்லது வேறு தனி ஒருவருக்கு நன்மை பயக்கும் என்பதை அறிந்து வேண்டுமென்றே அல்லது தெரிந்தே செய்யப்பட்டால், அது ஊழலாகக் கருதப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில சந்தர்ப்பங்களில், அரசின் சில பிரிவுகளை சட்டத்தின் எல்லைக்கு வெளியே பொதுமக்களின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது என்றும் விவாதித்துள்ளார்.

அத்தகைய நேர்மையான நோக்கத்துடன் செயல்படும் பொது அதிகாரிகள் பயப்படக்கூடாது எனவும் விளக்கியுள்ளார்.

கடந்த காலங்களில் இருந்து ஊழல் ஆதரவு நபர்களால் அரசாங்கம் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது என்றும் ரங்கா திசாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...