கோட்டாபயவிடம் வாக்குமூலம்..!
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவிடம் வாக்குமூலம்..!

Share

கோட்டாபயவிடம் வாக்குமூலம்..!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளதாக தெரியவருகிறது.

அதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி கோட்டாபயவிடம் வாக்கு மூலமொன்று பதிவு செய்து கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜுலை மாதம் 9ஆம் திகதி 17.85 மில்லியன் ரூபா பணம் ஜனாதிபதி மாளிகையிலிருந்து போராட்டக்காரர்களினால் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் புரவெசி பலய என்ற அமைப்பு லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தது.

இதேவேளை, ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணம் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியைச் சேர்ந்த வர்த்தகர்களினால் வழங்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

போராட்டம் இடம்பெற்ற காலத்தில் சேதமாக்கப்பட்ட மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை புனரமைப்பதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்ட காரணத்தினால் யார் எவ்வளவு தொகை பங்களிப்பு செய்தனர் என்பது பற்றிய விபரங்கள் தொலைந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1036524 cigar
செய்திகள்இலங்கை

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் நாடுகள்: 70.5% உடன் இந்தோனேசியா முதலிடம்; இலங்கை 8வது இடத்தில்!

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் இந்தோனேசியா உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இது...

MediaFile 2
செய்திகள்இந்தியா

நிகழ்நிலை சூதாட்ட செயலி வழக்கு: சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் ரூ. 11 கோடி சொத்துகள் முடக்கம்!

ஒரு குறிப்பிட்ட நிகழ்நிலை சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்...

25 690cc39f76f96
செய்திகள்இந்தியா

மாத்தறை வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் நவம்பர் 28 அன்று தெரிவு: வர்த்தமானி வெளியீடு!

மாத்தறை, வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் (தலைவர்) எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி தெரிவு...

24 6718a970f1422
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தாழங்குடாவில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதல்: சஹ்ரான் குழுவின் வெடிகுண்டு சோதனை நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பரபரப்பு!

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் சஹ்ரான் குழுவினரால் வெடிகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தை அண்மித்த ஒரு...