12 27
இலங்கைசெய்திகள்

அரச நிறுவனங்களில் அதிகரிக்கும் இலஞ்ச வழக்குகள்:விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

அரச நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடையே இலஞ்ச வழக்குகள் அதிகரித்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இலஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு அதனைப் பகிர்ந்து கொள்வதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், இலஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் கடுமையான குற்றங்கள் என்றும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் விழிப்புடன் இருப்பதாகவும், இலஞ்சம் வாங்குபவர்களும், கொடுப்பவர்களும் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்உலகம்

உலகையே உலுக்கும் எலான் மஸ்க்கின் மெகா திட்டம்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் xAI நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தடம் பதிக்கின்றன!

உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...