தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு : ஹரிணி தலைமையில் அதிருப்தி அணி

24 11

தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்தினுள் சப்தமின்றி பாரிய விரிசல் ஒன்று தீவிரமடைந்து வருவதாக அரசியல் ஆய்வாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம் ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் ஒரு அணி ஜே.வி.பி. சார்பு கடும்போக்குவாத அணியாகவும், பிரதமர் ஹரிணி தலைமையில் இன்னொரு அணி மிதவாதப் போக்குடைய அணியாகவும் பிளவுபடத் தொடங்கியுள்ளது.

தற்போதைக்கு பிரதமர் ஹரிணி தலைமையிலான அணியில் உயர் கல்வித் தகைமையுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி சேரத் தலைப்பட்டுள்ளனர்.

அதே நேரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் ஆரம்பத்தில் மிதவாதப் போக்குடைய அணி சார்பாக இருந்த போதும், அண்மையிலிருந்து கடும்போக்குவாத அணி பக்கம் சாயத் தொடங்கியிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகின்றது.

 

Exit mobile version