இலங்கையில் பலப்படுத்தப்பட்டுள்ள எல்லை பாதுகாப்பு
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பலப்படுத்தப்பட்டுள்ள எல்லை பாதுகாப்பு

Share

இலங்கையில் பலப்படுத்தப்பட்டுள்ள எல்லை பாதுகாப்பு

இலங்கையில் எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் எல்லை பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தி உள்ளனர்.

அதிக எண்ணிக்கையிலான சட்டவிரோத ஆட் கடத்தல் நடவடிக்கைகள் கொழும்பின் ஊடாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சட்டவிரோத ஆட்கடத்தில் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் எல்லை பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இதுவரையில் இலங்கையிலிருந்து சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் 102 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போலி கடவுச்சீட்டு, போலி விசா உள்ளிட்ட மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்கவும் வேறு நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளவும் வெளிநாட்டு பிரதிகள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீனர்களைப் போன்ற தோற்றமுடைய இந்திய தம்பதியினர் போலியான முறையிலான சீன கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி செல்ல முற்பட்டபோது அதிகாரிகள் அவர்களை கைது செய்துள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டிலும் இவ்வாறான 137 சம்பவங்கள் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...