tamilni 47 scaled
இலங்கைசெய்திகள்

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

Share

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தை நேற்று (02.11.2023) மாலை மீட்டுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் இராகலை ஹரஸ்பெத்த பகுதியில் வசித்த மலிந்த தில்ஷான் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் இராகலை பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சடலமாக மீட்க்கப்பட்ட மலிங்க தில்ஷான் தனது வீட்டில் தாய்,தந்தையரை தாக்கி சண்டையிட்டு நான் எங்காவது போய் எனது உயிரை மாய்த்துகொள்வேன் எனது உடம்புக்கூட உங்களுக்கு கிடைக்காது என கூறிவிட்டு பின் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேரியுள்ளார்.

இதையடுத்து குறித்த இளைஞனின் பெற்றோர் இராகலை பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து தனது மகன் மது அருந்திவிட்டு தங்களை தாக்கிவிட்டு கோபத்தில் வீட்டைவிட்டு சென்றதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

அதேநேரத்தில் கோபத்தில் சென்ற மகன் வீட்டுக்கு வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று (02) மாலை இளைஞரின் வீட்டாருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அந்த அழைப்பில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் ஒன்று தர்பனா எல மலை அடிவாரத்தில் கிடப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இத் தகவலை பெற்றோர் இராகலை பொலிஸ் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர்.

பின் தர்பனா எல மலை அடிவாரத்திற்கு விரைந்த இராகலை பொலிஸார் அங்கு உடல் பாகங்கள் சிதைந்து உயிரிழந்த நிலையில் இளைஞரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

அதேநேரத்தில் உயிரிழந்திருப்பதாக தனது மகன் என பெற்றோரும் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.

பின் சம்பவம் தொடர்பில் வலப்பனை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ள பொலிஸார் இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தையும் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் தர்பனா எல மலை சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்டுள்ளது என தெரிவித்த பொலிஸார் இம் மலை உச்சியிலிருந்து இவ் இளைஞன் வீழ்ந்துள்ளமையினால் உடல் பாகங்கள் சிதைந்து மரணம் சம்பவித்திருக்கிறது எனவும் தெரிவித்தனர்.

மேலும் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் மரண விசாரணையின் பின் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
23 64a7f7facdef2 1
இலங்கைசெய்திகள்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்: பரத் தர்ஷன் இயக்கத்தில் ‘ஓ சுகுமாரி’ திரைப்படத்தில் நடிக்கிறார்!

தமிழ் சினிமா ரசிகர்களால் கவனிக்கப்படும் பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், இப்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக...

Eggs 848x565 1
இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் முட்டைத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு – பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அதிக அளவில் கோழிகள் இறந்ததன் காரணமாக, எதிர்காலத்தில் முட்டைகளுக்குத் தட்டுப்பாடு...

854660 untitled 2
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிதியுதவி: வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள...

images 8
இலங்கைசெய்திகள்

மின் விநியோகம் வழமைக்குத் திரும்ப நடவடிக்கை: ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

அதிதீவிர வானிலையால் துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகளை வெகு விரைவில் மீள இணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...