9 26
இலங்கைசெய்திகள்

மிரிகானாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள மியன்மார் அகதிகள்

Share

மிரிகானாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள மியன்மார் அகதிகள்

திருகோணமலைக்கு (Trincomalee) கொண்டுவரப்பட்ட மியன்மார் படகில் பயணித்த 11 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் ஏனையோரை இன்றையதினம் (21) மிரிகானா முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த படகில் பயணித்த 115 பயணிகளும் அஷ்ரப் துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டு குருதி மாதிரிகள் பெறப்பட்டு சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களில் கற்பிணித் தாய் ஒருவர் உட்பட 39 ஆண்களும் 27 பெண்களும் 49 சிறுவர்களும், அடங்குகின்றனர்.

இவர்களை நேற்று மாலை திருகோணமலை நீதிமன்ற நீதிபதி அர்யூன் அரியரெட்ணம் விஜயம் மேற்கொண்டு விசாரணைகள் மேற்கொண்டிருருந்தார்.

மாலை 4.30 மணிக்குப் பின்னர் அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன இதன் பின்னர் படகை செலுத்தி வந்த குற்றச்சாட்டில் 11 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோர் ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைதினம் (21) இவர்கள் மிரிகான எனும் இடத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இவர்களுக்கு தேவையான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் உட்பட அரச திணைக்களங்களும் காவல்துறையினரும் தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

மியன்மாரில் (Myanmar) இருந்து 103 பயணிகளுடன் திசை மாறி வந்த படகில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கை இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த படகு நேற்று முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கியிருந்தது

இந்நிலையில், இன்று (20.12/2024) காலை திருகோணமலை (Trincomalee) துறைமுக அதிகாரசபை இறங்குதுறைக்கு குறித்த படகானது இலங்கை கடற்படையினரால் கொண்டுவரப்பட்டு அவர்களுக்கான உணவு மற்றும் குடிநீர் என்பன வழங்கப்பட்டன.

பின்னராக மருத்துவ பரிசோதனைகளுக்காக படகிலிருந்து பாதுகாப்பாக துறைமுகத்தில் இறக்கப்பட்டனர். இதன் போது குறித்த கப்பலில் 25மேற்பட்ட சிறுவர்கள் இருந்துள்ளனர், சிலர் மயக்கமடைந்த நிலையிலும் சுகவீனமுற்ற நிலையிலும் இருந்துள்ளனர் எனவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக 110 நபர்கள் மூன்று படகுகளில் தமது நாட்டிலிருந்து புறப்பட்டதாகவும் அதன்போது கடலில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக இரு படகுகள் விபத்திற்குள்ளானதாகவும் குறித்த அனர்தத்தில் சிறுவர்கள் உட்பட 6 நபர்கள் மரணமடைந்திருப்பதுடன் எஞ்சிய அனைவரும் குறித்த படகில் ஏறி உயிர்தப்பியதாகவும் இதன்போது தெரிவித்தார்.

இவர்களுக்கான ஆரம்பநிலை சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன் நீதித்துறையின் கட்டமைப்புக்களுக்கு இணங்க அவர்களுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் செய்யப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இதன்போது தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...