tamilni 199 scaled
இலங்கைசெய்திகள்

கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படவுள்ள நிறுவனங்கள்

Share

கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படவுள்ள நிறுவனங்கள்

உரிய ஒப்பந்தங்கள் இல்லாத மற்றும் தரமற்ற மருந்துகளை வழங்கும் நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் நேற்று(15) சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இக் கலந்துரையாடலிலேயே சுகாதார அமைச்சு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த கலந்துரையாடலில், விலை நிர்ணயக் குழு ஒன்றின் ஊடாக மருந்துகளின் விலைகள் தொடர்பாக தீர்மானங்களை முன்வைக்குமாறும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான மருந்துகளை சரியான முறைகளில் இறக்குமதி செய்ய இதன் போது தீர்மானிக்கப்பட்டது.

மேலும், உரிய ஒப்பந்தங்கள் இல்லாத நிறுவனங்களையும் தரமற்ற மருந்துகளை வழங்கும் நிறுவனங்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்க இதன்போது சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

கலந்துரையாடலில் அரச மருந்தக கூட்டுத்தாபனம் மற்றும் ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...