tamilni 199 scaled
இலங்கைசெய்திகள்

கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படவுள்ள நிறுவனங்கள்

Share

கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படவுள்ள நிறுவனங்கள்

உரிய ஒப்பந்தங்கள் இல்லாத மற்றும் தரமற்ற மருந்துகளை வழங்கும் நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் நேற்று(15) சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இக் கலந்துரையாடலிலேயே சுகாதார அமைச்சு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த கலந்துரையாடலில், விலை நிர்ணயக் குழு ஒன்றின் ஊடாக மருந்துகளின் விலைகள் தொடர்பாக தீர்மானங்களை முன்வைக்குமாறும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான மருந்துகளை சரியான முறைகளில் இறக்குமதி செய்ய இதன் போது தீர்மானிக்கப்பட்டது.

மேலும், உரிய ஒப்பந்தங்கள் இல்லாத நிறுவனங்களையும் தரமற்ற மருந்துகளை வழங்கும் நிறுவனங்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்க இதன்போது சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

கலந்துரையாடலில் அரச மருந்தக கூட்டுத்தாபனம் மற்றும் ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...