3 4
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதிகளில் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவும் பா.ஜ.க!

Share

தமிழர் பகுதிகளில் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவும் பா.ஜ.க!

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி இலங்கையின் தமிழர் பகுதிகளில் சிவசேனை அமைப்பின் ஒத்துழைப்புடன் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன்(S. Kajendran) தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிங்கள பௌத்தமயமாக்கல் இடம்பெற்று வருகின்றபோது, இந்தியாவின் பா.ஜ.கவின் விரிவாக்கமாக இருக்கின்ற சிவசேனையின் இலங்கை முகவர்கள், தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்படுகின்றபௌத்த விகாரைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கின்ற செயற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தில் இலங்கைக்கு எவ்வாறான நிலைமை காணப்படும் என்று கஜேந்திரன் எம்.பியிடம் சர்வதேச ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இலங்கைத் தீவில் சிங்கள பௌத்த விரிவாக்கத்துக்கு எந்தவித இடையூறும் இல்லை.

இந்தியா சிங்கள பௌத்த விரிவாக்கத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும், சிங்கள பௌத்த விரிவாக்கத்துக்குச் சீனாவிடம் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்ற நம்பிக்கையை உருவாக்கி இலங்கையைத் தமது நட்பு சக்தியாக மாற்றுகின்ற செயற்பாடுகள் மாத்திரமே இடம்பெறுகின்றது .

மேலும், இந்தியா தமிழ் தேசத்தை அங்கீகரித்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையில் சமஷ்டி அரசமைப்பை இலங்கையில் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதற்காக இந்தியா எமது நட்பு சக்தியாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்.” என்றார்.

Share
தொடர்புடையது
world 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏர்பஸ் ஊழல் விவகாரம்: லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ ஆஜர்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம்...

world 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கண் தானத்திற்குப் பெருகும் ஆதரவு: 84 சதவீத மக்கள் விருப்பம்

இலங்கையில் உள்ள மக்களில் சுமார் 84 சதவீதம் பேர் தமது கண்களைத் தானம் செய்ய விருப்பம்...

world 64
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்: நாமல் ராஜபக்ஷ திட்டவட்டம்

விசாரணை அமைப்புகள் அழைக்கும் போதெல்லாம் தானும் தனது கட்சியும் நேரில் ஆஜராகத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா...

world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிரஜசக்தி தேசிய திட்டம்: 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி

இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான ‘பிரஜசக்தி’ தேசிய திட்டத்தின் கீழ், 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான...