இலங்கைசெய்திகள்

அநுர அரசில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Share
6 1
Share

அநுர அரசில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் உரையாற்றிய வசந்த சமரசிங்க, “ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ எந்தவொரு அரசாங்க வீட்டையும் பயன்படுத்துவதில்லை.

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளை ஒப்படைத்துள்ளார்கள், எங்கள் அமைச்சர்கள் யாரும் வீடுகள் கேட்கவில்லை, உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வுகளின் போது தங்குவதற்கு மாதிவெல குடியிருப்பு வளாகத்தில் வீடு வழங்கப்படுகிறது.

அமைச்சராக எனக்கு மூன்று வி8 வாகனங்கள் கிடைக்கின்றன. ஆனால் நான் அவற்றில் எதையும் பயன்படுத்துவதில்லை.

சம்பளம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரித்துடைய ஒன்று, ஆனால் ஓய்வூதியம் கண்டிப்பாக ஒழிக்கப்படும்” என்றார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...