rtjy 133 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ள மிகப்பெரிய நிறுவனங்கள்

Share

இலங்கையில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ள மிகப்பெரிய நிறுவனங்கள்

தற்போது இந்தியாவின் அதானி, டாட்டா போன்ற நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆயத்தமாகியுள்ளன, மேலும், சீனாவின் துறைமுக நகர நிறுவனம், சினோபெக் நிறுவனம் பாரியளவில் முதலீடுகளைச் செய்ய ஆரம்பித்துள்ளன என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஆரம்பத்தில், எமக்கு முக்கியமாக இருந்தது சர்வதேசத்தில் நமது நாட்டைப் பற்றிய சரியான பிம்பத்தை உருவாக்குவதேயாகும். நாடு மிகவும் மோசமான நிலையில் வீழ்ச்சியடைந்த ஒரு காலகட்டத்தின் பின்னர் மீண்டும் எழுந்திருப்பதற்குத் தேவையான மறுசீரமைப்பைச் செய்வதற்கு அரசாங்கத்தினால் முடிந்திருக்கின்றது.

இந்த நிலையில்தான் சர்வதேசமும் எம்மோடு இணைந்து கொள்கிறது. அந்தச் செய்தி சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாகவே செல்ல வேண்டும்.

அதன் காரணமாகத்தான் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக நாம் செய்து கொண்ட ஒப்பந்தம் எமக்கு முக்கியமாகின்றது.

கடன் தொகையின் முதல் தவணை பெறப்பட்டதன் மூலம், நாட்டை படுகுழியில் இருந்து மீட்க நாம் எடுத்த நடவடிக்கை வெற்றிகரமான ஒன்று என்பது உறுதியானது.

அதன் மூலம் உலக வங்கி எமக்கு உதவி செய்ய ஆரம்பித்தது. ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி செய்யத் தொடங்கியது. கடன் மறுசீரமைப்பைச் செய்வதற்கு அனைத்தும் மிகவும் முக்கியமானதாகியது. இவற்றால் வரும்காலங்களில் முதலீடுகள் இலங்கைக்கு வரத் தொடங்கும்.

தற்போது இந்தியாவின் அதானி, டாட்டா போன்ற நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆயத்தமாகியுள்ளன. சீனாவின் துறைமுக நகர நிறுவனம், சினோபெக் நிறுவனம் பாரியளவில் முதலீடுகளைச் செய்ய ஆரம்பித்துள்ளன. அண்மையில் அமெரிக்காவின் டீ. எப். சீ என்ற நிறுவனம் பல்வேறு துறைகளில் ஒரு பில்லியன் டொலர் நிதியை முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையில் மாத்திரம் 533 மில்லியன் டொலரை முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி வேலைத்திட்டம் தொடர்பில் சர்வதேச சமூகத்தில் ஒரு நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளதை இதிலிருந்து நாம் அறியலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
64 magnitude earthquake strikes baculin philippines no tsunami warning issued 1767762531718
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.7 மெக்னியூட் அளவில் அதிர்வு – சுனாமி எச்சரிக்கை இல்லை!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியான மிண்டானாவோ (Mindanao) தீவில் இன்று (07) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது....

Seeman 3
செய்திகள்இந்தியா

ஜன நாயகன் படத்தைத் தடுக்கும் அளவிற்கு சர்ச்சைகள் இல்லை – சென்சார் தாமதம் குறித்து சீமான் ஆவேசம்!

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ (Jana Nayagan) திரைப்படம்...

Screenshot 2025 12 05 173047
செய்திகள்இலங்கை

பதிவு செய்யப்படாத வர்த்தகர்களுக்கும் நிவாரணம்: அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு புதிய கடன் திட்டம் – ஜனாதிபதி அறிவிப்பு!

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களை (SME) மீண்டும் கட்டியெழுப்புவதற்கான...

9f9401ee34854fe8b9424a9905db62531679431836355184 original
செய்திகள்இலங்கை

திருச்சி சிறப்பு முகாம்: விடுதலை செய் அல்லது நாடு கடத்து – இலங்கை இளைஞரின் தொடர் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!

இந்தியாவின் திருச்சி சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் (Special Camp) தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர்...