இலங்கைசெய்திகள்

கூச்சலிட்டு குழப்பம் விளைவிக்கும் அம்பிட்டிய சுமன தேரர்!

Share
rtjy 103 scaled
Share

கூச்சலிட்டு குழப்பம் விளைவிக்கும் அம்பிட்டிய சுமன தேரர்!

மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அம்பிட்டியே சுமன தேரர் தலைமையிலான குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டக்களத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு வீதித் தடைகளும் போடப்பட்டுள்ளன.

எனினும், அங்கு பெரும் கூச்சலிட்டு குழப்பம் ஏற்படுத்துவதுடன், வீதித் தடைகள் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த போராட்டத்தில் தும்புத்தடிகளோடு, அம்பிட்டிய சுமன தேரர் உள்ளிட்ட குழுவினர் களமிறங்கியுள்ளனர்.

Gallery

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்டவர்களை, அம்பிட்டிய சுமன தேரர் கெட்ட வார்த்தைகளால் கடுமையாக திட்டி கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றார்.

மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தப்படும் மயிலத்தமடு பிரதேசத்தை விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு கோரி அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படும் சிங்கள மக்கள், மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டனர்.

இன்றைய தினம் ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம் இடம்பெறவுள்ள நிலையில் மேற்படி பயிர்செய்கையாளர்கள் உள்ளிட்ட குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதியே கேளுங்கள் சிங்களவர்களை துரத்துகின்றார்கள், சாணக்கியன் மற்றும் தொண்டமான் எமக்கு வேண்டாம், இனவாதம் தூண்ட வேண்டாம் என்ற கோசங்களை எழுப்பியவாறு இவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

Gallery

இதேவேளை தங்கள் கால்நடைகளின் பாரம்பரிய மேய்ச்சற்தரையாக விளங்கும் மயிலத்தமடுவில் அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களை அகற்றி அங்கு தமது கால்நடைகளை பாதுகாப்பாக மேய்ப்பதற்கு இடமளிக்குமாறு கோரிய கால்நடை வளர்ப்பளர்களின் தொடர் போராட்டமானது இன்றுடன் 23 நாட்களாக இடம்பெறுகின்றமையும் குறிப்பிடப்படுகின்றது.

மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமன தேரர் உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பில் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மாலை மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ள உள்ள நிலையில் இவ்வாறு போராட்டம் நடத்தப்படுகின்றது.

இதேவேளை, அம்பிட்டிய சுமன தேரர் கையில் தும்புத்துடிகளை வைத்து கொண்டு வீதியோரத்தில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதேசமயம், அம்பிட்டிய சுமன தேரருடன் இணைந்து பெரும்பான்மை இன மக்கள் சிலரும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...