25 6933c41f290ff
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்புச் சிறைக்கைதிகள் தங்கள் உணவை வெள்ள நிவாரணத்திற்காக நன்கொடையாக வழங்கினர்!

Share

நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக, மட்டக்களப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் மனிதாபிமான உணர்வுடன் ஒரு முன்மாதிரியான பணியைச் செய்துள்ளனர்.

தமது இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவை நன்கொடையாக வழங்கிய சிறைக்கைதிகள், அதனை உலர் உணவுப் பொருட்களாக மாற்றி நேற்று (டிசம்பர் 5) உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளனர்.

இந்த உணவுப் பொருட்கள் சிறைக் கைதிகளின் ஊடாகச் சிறைச்சாலை அத்தியட்சகரிடம் வழங்கப்பட்டன. பின்னர், இந்த உலர் உணவுப் பொதிகளைச் சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜிடம் கையளித்தார்.

சிறைக் கைதிகள், தாம் சிறைக்குள் இருந்தபோதும் சமூகத்தின் மீதும் பாதிக்கப்பட்ட மக்கள் மீதும் கொண்டிருந்த கரிசனையை இந்த நன்கொடை வெளிப்படுத்துவதாக அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...