25 6933c41f290ff
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்புச் சிறைக்கைதிகள் தங்கள் உணவை வெள்ள நிவாரணத்திற்காக நன்கொடையாக வழங்கினர்!

Share

நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக, மட்டக்களப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் மனிதாபிமான உணர்வுடன் ஒரு முன்மாதிரியான பணியைச் செய்துள்ளனர்.

தமது இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவை நன்கொடையாக வழங்கிய சிறைக்கைதிகள், அதனை உலர் உணவுப் பொருட்களாக மாற்றி நேற்று (டிசம்பர் 5) உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளனர்.

இந்த உணவுப் பொருட்கள் சிறைக் கைதிகளின் ஊடாகச் சிறைச்சாலை அத்தியட்சகரிடம் வழங்கப்பட்டன. பின்னர், இந்த உலர் உணவுப் பொதிகளைச் சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜிடம் கையளித்தார்.

சிறைக் கைதிகள், தாம் சிறைக்குள் இருந்தபோதும் சமூகத்தின் மீதும் பாதிக்கப்பட்ட மக்கள் மீதும் கொண்டிருந்த கரிசனையை இந்த நன்கொடை வெளிப்படுத்துவதாக அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...