6 55
இலங்கைசெய்திகள்

தமிழர் பிரதேசத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் சட்டவிரோத செயல் : சுற்றிவளைத்து பிடித்த காவல்துறை

Share

மட்டக்களப்பு(batticaloa) கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் காவல்துறையினரால் செவ்வாய்க்கிழமை(28.01.2025) மாலை முற்றுகையிடப்பட்டு 23 பரல்களில் 15 இலட்சம் மில்லி லீட்டர் கோடா 5,25,000 லீட்டர் கசிப்பு மற்றும் தோணி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கொட்டிச்சோலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் சுற்றிவளைத்தனர்.

இச்சுற்றி வளைப்பு தேடுதலின் போது 23 பரல்களில் சுமார் 14 லட்சத்து 50 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா மற்றும் 750 போத்தல்களில் 5,25,000 மில்லி லீட்டர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள் பயணிக்கும் தோணியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி தெலங்கா வலகே தலைமையிலான காவல்துறை குழுவினர் மேற்படி சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் கொக்கட்டிச்சோலை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...