tamilni 204 scaled
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் விபரீத முடிவெடுத்த தந்தை

Share

மட்டக்களப்பில் விபரீத முடிவெடுத்த தந்தை

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவு உட்பட்ட மாஞ்சோலை கிராமத்தில் நபரொருவர் பெட்ரோலை தன்னில் ஊற்றி எரிந்து கொண்டு தன்னுடைய மகளையும் எரிப்பதற்கு முயற்சி செய்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் (15.10.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை கிராமத்தில் வசித்து வந்த சலீம் என்பவர் தன்னுடைய மகளை துன்புறுத்தல் செய்து வருவதாக அப்பிள்ளையின் தாயின் சகோதரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த முறைப்பாட்டுக்கமையே விசாரணையயை மேற்கொள்ள சலீமின் வீட்டுக்கு பொலிஸார் சென்ற பொழுது அவர் பெட்ரோலை தன்னில் ஊற்றி எரிந்து கொண்டு தன்னுடைய மகளையும் எரிப்பதற்கு முயற்சி செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து சலீமின் மகளை காப்பாற்றியுள்ளதுடன், காப்பாற்ற முற்பட்ட பொலிஸார் தீக்காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சலீமின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவரது மகள் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...