tamilni 204 scaled
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் விபரீத முடிவெடுத்த தந்தை

Share

மட்டக்களப்பில் விபரீத முடிவெடுத்த தந்தை

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவு உட்பட்ட மாஞ்சோலை கிராமத்தில் நபரொருவர் பெட்ரோலை தன்னில் ஊற்றி எரிந்து கொண்டு தன்னுடைய மகளையும் எரிப்பதற்கு முயற்சி செய்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் (15.10.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை கிராமத்தில் வசித்து வந்த சலீம் என்பவர் தன்னுடைய மகளை துன்புறுத்தல் செய்து வருவதாக அப்பிள்ளையின் தாயின் சகோதரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த முறைப்பாட்டுக்கமையே விசாரணையயை மேற்கொள்ள சலீமின் வீட்டுக்கு பொலிஸார் சென்ற பொழுது அவர் பெட்ரோலை தன்னில் ஊற்றி எரிந்து கொண்டு தன்னுடைய மகளையும் எரிப்பதற்கு முயற்சி செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து சலீமின் மகளை காப்பாற்றியுள்ளதுடன், காப்பாற்ற முற்பட்ட பொலிஸார் தீக்காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சலீமின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவரது மகள் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 32
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கொரியா இடையே பொருளாதார ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை: கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை அரசாங்கத்திற்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி (EDCF)...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இனமலுவ ஊரக வங்கியில் துணிகர கொள்ளை: 20 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு

ரங்கிரி தம்புள்ளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான இனமலுவ ஊரக வங்கிக் கிளையில், மர்ம நபர்கள்...

Untitled 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

என்.டி.பி வங்கியில் ரூ. 13.2 பில்லியன் மோசடி: மத்திய வங்கியின் கண்காணிப்பு தோல்வி குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) குறிப்பிட்ட ஒரு பிரிவில் சுமார் 13.2 பில்லியன் ரூபாய் மதிப்பிலான...

Untitled 29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வித்யா படுகொலை வழக்கு: ஸ்விஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப்...