tamilni 204 scaled
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் விபரீத முடிவெடுத்த தந்தை

Share

மட்டக்களப்பில் விபரீத முடிவெடுத்த தந்தை

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவு உட்பட்ட மாஞ்சோலை கிராமத்தில் நபரொருவர் பெட்ரோலை தன்னில் ஊற்றி எரிந்து கொண்டு தன்னுடைய மகளையும் எரிப்பதற்கு முயற்சி செய்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் (15.10.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை கிராமத்தில் வசித்து வந்த சலீம் என்பவர் தன்னுடைய மகளை துன்புறுத்தல் செய்து வருவதாக அப்பிள்ளையின் தாயின் சகோதரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த முறைப்பாட்டுக்கமையே விசாரணையயை மேற்கொள்ள சலீமின் வீட்டுக்கு பொலிஸார் சென்ற பொழுது அவர் பெட்ரோலை தன்னில் ஊற்றி எரிந்து கொண்டு தன்னுடைய மகளையும் எரிப்பதற்கு முயற்சி செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து சலீமின் மகளை காப்பாற்றியுள்ளதுடன், காப்பாற்ற முற்பட்ட பொலிஸார் தீக்காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சலீமின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவரது மகள் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....