பிரதமரின் கூட்டத்தில் கதிரையை புறக்கணித்த சாணக்கியன்!
இலங்கைசெய்திகள்

பிரதமரின் கூட்டத்தில் கதிரையை புறக்கணித்த சாணக்கியன்!

Share

பிரதமரின் கூட்டத்தில் கதிரையை புறக்கணித்த சாணக்கியன்!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பிரதமரின் வருகையை முன்னிட்டு இடம்பெற்ற கூட்டத்தில், அதிதிகளின் கதிரையை புறக்கணித்து மக்களில் ஒருவராக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பங்குபற்றியுள்ளார்.

இதன்போது இந்த அரசு மற்றும் அரசு சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசு சார்ந்து திரை மறைவில் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது மக்களின் உரிமை மற்றும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை, அரசு சார்ந்தவர்களின் ஊழல்களை, மக்களுக்கான அநீதிகளை கண்டுகொள்ளாது உதாசீனப்படுத்தும் விதமாக நடந்துகொள்கின்றனர் என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாகவே அவர் நேற்றையதினம்(04.08.2023) அரச அதிதிகளின் வரிசையில் அமராமல் மக்களோடு மக்களாக அந்த கூட்டத்தில் பங்குபற்றியுள்ளார்.

இதேவேளை குறித்த கூட்டத்தில் அரசு சார் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழல்கள் பற்றிய ஆவணத்தினையும் பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளார்.

இதன்போது பிரதமர் இவ் ஊழல்கள் தொடர்பான ஊழல் மோசடி விசாரணைக் குழு ஒன்றினை அமைப்பதாக உறுதியளித்துள்ளார்.

இந்த ஊழல்கள், மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் எதிர்வரும் காலங்களில் இவர்களின் வருகைகளை ஒட்டி எமது மக்களுடன் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதனையும் சாணக்கியன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
121664732
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை மாணவி 3 மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை முயற்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வைத்தியசாலையில் அனுமதி!

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஒருவர் இன்று...

images 2 3
செய்திகள்இலங்கை

நினைவேந்தல் காணி விவகாரம்: இரு தரப்பினரும் ஒற்றுமையாக வாருங்கள்; இல்லையேல் நல்லூர் நிலம் வழங்கப்படாது – முதல்வர் மதிவதனி அதிரடி அறிவிப்பு!

நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வைக் கொண்டாடுவது தொடர்பாகக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இன்மையால், இரு தரப்பினருக்கும்...

bk7qlddg hamas afp 625x300 19 February 25
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 15 பாலஸ்தீனிய உடலங்களுக்குப் பதிலாக மேலும் ஒரு இஸ்ரேலிய வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்தது!

எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடர்ந்து...

251107 Olivier Rioux ch 1044 acd69e
உலகம்செய்திகள்

7 அடி 9 அங்குல உயர கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ: உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux),...