பிரதமரின் கூட்டத்தில் கதிரையை புறக்கணித்த சாணக்கியன்!
இலங்கைசெய்திகள்

பிரதமரின் கூட்டத்தில் கதிரையை புறக்கணித்த சாணக்கியன்!

Share

பிரதமரின் கூட்டத்தில் கதிரையை புறக்கணித்த சாணக்கியன்!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பிரதமரின் வருகையை முன்னிட்டு இடம்பெற்ற கூட்டத்தில், அதிதிகளின் கதிரையை புறக்கணித்து மக்களில் ஒருவராக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பங்குபற்றியுள்ளார்.

இதன்போது இந்த அரசு மற்றும் அரசு சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசு சார்ந்து திரை மறைவில் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது மக்களின் உரிமை மற்றும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை, அரசு சார்ந்தவர்களின் ஊழல்களை, மக்களுக்கான அநீதிகளை கண்டுகொள்ளாது உதாசீனப்படுத்தும் விதமாக நடந்துகொள்கின்றனர் என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாகவே அவர் நேற்றையதினம்(04.08.2023) அரச அதிதிகளின் வரிசையில் அமராமல் மக்களோடு மக்களாக அந்த கூட்டத்தில் பங்குபற்றியுள்ளார்.

இதேவேளை குறித்த கூட்டத்தில் அரசு சார் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழல்கள் பற்றிய ஆவணத்தினையும் பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளார்.

இதன்போது பிரதமர் இவ் ஊழல்கள் தொடர்பான ஊழல் மோசடி விசாரணைக் குழு ஒன்றினை அமைப்பதாக உறுதியளித்துள்ளார்.

இந்த ஊழல்கள், மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் எதிர்வரும் காலங்களில் இவர்களின் வருகைகளை ஒட்டி எமது மக்களுடன் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதனையும் சாணக்கியன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...