15 22
இலங்கைசெய்திகள்

படலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்து ஆராய்வதற்கு விசேட குழு

Share

படலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்து ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்கவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. நான்கு பேரைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிரேஸ்ட மேலதிக சொலிசுட்டர் ஜெனரல் ரொஹான்த அபேசூரியவின் தலைமையில் இந்தக் குழு செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி சொலிசுட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், அரசாங்க சிரேஸ்ட சட்டத்தரணி ஜயனி வேகடபொல மற்றும் அரச சட்டத்தரணி சக்தி ஜயகொடராச்சி ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

படலந்த குழு அறிக்கையின் சாட்சியங்கள் ஊடாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முடியுமா என இந்த குழு ஆராய உள்ளது.

மேலும் தொடர்ந்தும் விசாரணை செய்யப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இந்த குழு கவனம் செலுத்த உள்ளது.

88-90ம் ஆண்டுகளில் படலந்த வீதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சித்திரவதை மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் படலந்த ஆணைக்குழு நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...