24 65fbb007e476d
இலங்கைசெய்திகள்

வேட்பாளர்கள் தொடர்பில் பசில் வெளியிட்ட தகவல்

Share

வேட்பாளர்கள் தொடர்பில் பசில் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் தற்போது பேசுவது பொருத்தமற்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 56 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

மே மாதம் முதலாம் திகதி உலக தொழிலாளர் தினத்தை கொண்டாடுவது குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.

கட்சியின் மே பேரணி பொரளை கெம்பல் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் உரையாற்றிய பசில் ராஜபக்ஷ , போராட்டத்தின் பின்னர் விமான நிலையத்திற்கு செல்வதற்கு கூட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் வழிசெய்தார் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் .ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...