24 660e642457adc
இலங்கைசெய்திகள்

முறியடிக்கப்பட்ட பசிலின் முயற்சி

Share

முறியடிக்கப்பட்ட பசிலின் முயற்சி

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றி நாடாளுமன்றத்தை கலைக்க மேற்கொள்ளப்பட்ட பசில் ராஜபக்சவின் முயற்சி முற்றாக தோல்வியடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் தேர்தலை அறிவிப்பதற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது அரசியல் ரீதியாக சாதகமானது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து, அரசியலமைப்பு ரீதியில் அதிபர் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தற்போதைக்கு நாடாளுமன்றத் தேர்தலை நடத்தப் போவதில்லை எனவும் அதிபர் ரணில் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அவசர நாடளுமன்ற தேர்தலை நடத்துவதற்காக நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை பசில் ராஜபக்சவுக்கு விசுவாசமானவர்கள் நிறைவேற்ற முயற்சித்துள்ளனர்.

எனினும், அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான நாடளுமன்ற உறுப்பினர்கள் போதாத காரணத்தினால் அந்த முயற்சி இதுவரை தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...