rtjy 63 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்

Share

தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க குடியுரிமையை கைவிடுமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே ஐக்கிய மக்கள் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி ஆகியன ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளன.

குறித்த கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வரும் பின்னணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் வேட்பாளரை அறிவிக்காதது அரசியல் ரீதியாக பாதகமானது என மூத்த தலைவர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

முதிர்ந்த அரசியல்வாதியாகவும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் பசில் ராஜபக்ஷ ஆற்றிய பாத்திரத்தை கருத்திற்கொண்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் முன்வைக்கப்படக்கூடிய மிகவும் பொருத்தமான வேட்பாளர் பசில் ராஜபக்ஷ கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுமாறு பசில் ராஜபக்சவிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று தடவைகள் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் வியத்மக போன்ற அமைப்புக்களின் வேண்டுகோளுக்கமைய, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கியதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...