eh
இலங்கைசெய்திகள்

பசிலுக்கு அமெரிக்காவில் பெருமளவு சொத்துக்கள் : அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி

Share

பசிலுக்கு அமெரிக்காவில் பெருமளவு சொத்துக்கள் : அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி

இலங்கையில் இருந்து கொண்டு அமெரிக்காவில் (United States) தனது பெயரிலும் , தன்னுடைய குடும்பத்தாரது பெயர்களிலும் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) பாரியளவு செத்துக்களை சேமித்து வைத்திருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

நிதி குற்ற புலனாய்வு பிரிவில் நேற்றைய தினம் (03.01.2025) வாக்குமூலம் வழங்க வந்திருந்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் “பசில் ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்காவில் உள்ள செத்துக்கள் தொடர்பில் சில வருடங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அது தொடர்பில் நான் எனது தெளிவுபடுத்தலை வழங்கினேன். இது தெடர்பில் எழுத்துமூல சில ஆவணங்களையும் நாம் சமர்பித்து இருக்கினே்றோம்.

பசில் ராஜபக்ச அமெரிக்காவில் எந்த தொழிலும் செய்யவில்லை.ஆனால் எம்மால் வழங்கப்பட்டுள்ள ஆவணங்களில் அவருடைய சொத்து விபரங்கள் அதற்கு முரணாக காணப்படுகிறது.

இலங்கையில் செய்த தொழில், பெற்றுக்கொண்ட பணத்தினூடாக அவர் இவ்வாறு சொத்துக்களை கோரி இருக்கின்றார்.

நாம் வழங்கிய தகவல்களை அடிப்படையாக கொண்டு ஏனைய தகவல்களை சேகரிப்பது காவல்துறையின் கடமையாகும்.

இது தொடர்பான விசாரணைகள் முறையாக இடம்பெற்றால் இன்னும் பல் தகவல்கள் கிடைக்கப்பெறும்.

பசில் ராஜபக்ச இரட்டை குடியுரிமை கொண்டவர் ஆவார். எனவே அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிரான சட்ட சட்ட நடவடிக்கையை விட பசில் ராஜபக்சவிற்கு எதிரான நடவடிக்கை கடுமையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...