eh
இலங்கைசெய்திகள்

பசிலுக்கு அமெரிக்காவில் பெருமளவு சொத்துக்கள் : அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி

Share

பசிலுக்கு அமெரிக்காவில் பெருமளவு சொத்துக்கள் : அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி

இலங்கையில் இருந்து கொண்டு அமெரிக்காவில் (United States) தனது பெயரிலும் , தன்னுடைய குடும்பத்தாரது பெயர்களிலும் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) பாரியளவு செத்துக்களை சேமித்து வைத்திருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

நிதி குற்ற புலனாய்வு பிரிவில் நேற்றைய தினம் (03.01.2025) வாக்குமூலம் வழங்க வந்திருந்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் “பசில் ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்காவில் உள்ள செத்துக்கள் தொடர்பில் சில வருடங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அது தொடர்பில் நான் எனது தெளிவுபடுத்தலை வழங்கினேன். இது தெடர்பில் எழுத்துமூல சில ஆவணங்களையும் நாம் சமர்பித்து இருக்கினே்றோம்.

பசில் ராஜபக்ச அமெரிக்காவில் எந்த தொழிலும் செய்யவில்லை.ஆனால் எம்மால் வழங்கப்பட்டுள்ள ஆவணங்களில் அவருடைய சொத்து விபரங்கள் அதற்கு முரணாக காணப்படுகிறது.

இலங்கையில் செய்த தொழில், பெற்றுக்கொண்ட பணத்தினூடாக அவர் இவ்வாறு சொத்துக்களை கோரி இருக்கின்றார்.

நாம் வழங்கிய தகவல்களை அடிப்படையாக கொண்டு ஏனைய தகவல்களை சேகரிப்பது காவல்துறையின் கடமையாகும்.

இது தொடர்பான விசாரணைகள் முறையாக இடம்பெற்றால் இன்னும் பல் தகவல்கள் கிடைக்கப்பெறும்.

பசில் ராஜபக்ச இரட்டை குடியுரிமை கொண்டவர் ஆவார். எனவே அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிரான சட்ட சட்ட நடவடிக்கையை விட பசில் ராஜபக்சவிற்கு எதிரான நடவடிக்கை கடுமையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55...

images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை...

images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...