3 20
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் வரிக் கொள்கையால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி

Share

இலங்கையில் அனைத்து வங்கிகளிலும் வைப்பு செய்யப்பட்டுள்ள வைப்புத்தொகைகளுக்கு விதிக்கப்படும் பிடித்தம் செய்யும் வரி 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் வங்கிகளில் ஏற்கனவே வைப்பு செய்யப்பட்ட சுமார் 300 மில்லியன் ரூபாய் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக பங்குச் சந்தையில் கணிசமான வளர்ச்சி நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிலையான வைப்புகளுக்கான பிடித்தம் செய்யும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், அதிகளவான வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்து பணத்தை மீளப்பெற்றுக்கொள்ளவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக வங்கிகளில் பணப்புழக்க நெருக்கடி உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த செயற்பாடு காரணமாக வங்கிகள் மட்டுமன்றி பிரபல நிதி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய வங்கி ஆளுநரின் தகவலுக்கமைய, இலங்கையில் வங்கிகளில் 65 மில்லியன் வைப்புத்தொகைகள் உள்ளன. அவற்றில் சுமார் 1.7 ட்ரில்லியன் ரூபா வைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் நிதி வரம்பை அதிகரிக்கும் நோக்கில் வங்கிகளில் பெறப்படும் வட்டிகளுக்கு இந்த பிடித்தம் செய்தல் வரி அறவீடு செய்யப்படுகின்றன.

அதேவேளை நிலையான வைப்புக்களுக்கு வருடாந்தம் 18 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை வட்டியாக பெற்றால் அதற்கும் வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...