3 20
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் வரிக் கொள்கையால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி

Share

இலங்கையில் அனைத்து வங்கிகளிலும் வைப்பு செய்யப்பட்டுள்ள வைப்புத்தொகைகளுக்கு விதிக்கப்படும் பிடித்தம் செய்யும் வரி 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் வங்கிகளில் ஏற்கனவே வைப்பு செய்யப்பட்ட சுமார் 300 மில்லியன் ரூபாய் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக பங்குச் சந்தையில் கணிசமான வளர்ச்சி நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிலையான வைப்புகளுக்கான பிடித்தம் செய்யும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், அதிகளவான வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்து பணத்தை மீளப்பெற்றுக்கொள்ளவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக வங்கிகளில் பணப்புழக்க நெருக்கடி உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த செயற்பாடு காரணமாக வங்கிகள் மட்டுமன்றி பிரபல நிதி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய வங்கி ஆளுநரின் தகவலுக்கமைய, இலங்கையில் வங்கிகளில் 65 மில்லியன் வைப்புத்தொகைகள் உள்ளன. அவற்றில் சுமார் 1.7 ட்ரில்லியன் ரூபா வைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் நிதி வரம்பை அதிகரிக்கும் நோக்கில் வங்கிகளில் பெறப்படும் வட்டிகளுக்கு இந்த பிடித்தம் செய்தல் வரி அறவீடு செய்யப்படுகின்றன.

அதேவேளை நிலையான வைப்புக்களுக்கு வருடாந்தம் 18 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை வட்டியாக பெற்றால் அதற்கும் வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...