27 7
இலங்கை

வங்கிகளில் உடமைகளை அடகு வைத்தவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

Share

வங்கிகளில் உடமைகளை அடகு வைத்தவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

சுற்றுலா ஹோட்டல்களை அடமானமாக வைத்து வங்கிகளில் பெற்ற கடனை செலுத்த தவறியதன் காரணமாக அநுராதபுரத்தில் உள்ள 25 முக்கிய சுற்றுலா விடுதிகள் நிதி நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மேலும் பல சிறிய மற்றும் நடுத்தர சுற்றுலா விடுதிகள் இடிந்து விழுந்துள்ளதாக அநுராதபுரம் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டெமியன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

“ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மற்றும் கொரோனா வைரஸின் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு, முழு நாட்டின் சுற்றுலா வணிகமும் வீழ்ச்சி கண்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரவில்லை, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வரவில்லை. இதனால், இந்த நாட்டில் சுற்றுலா வணிகம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனால், கடன் வாங்கிய ஹோட்டல் உரிமையாளர்கள் அனைவரும் கடும் நிதி நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

கடன் பெற்ற ஹோட்டல் உரிமையாளர்கள், கடனை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளனர். தற்போது, ​​தனியார் வங்கிகளில் எங்கள் ஹோட்டல்களை அடகு வைத்து கடன் வாங்கியுள்ளோம்.

கடனை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது, ஆனால் இதுவரை அனுராதபுரத்தில் உள்ள எனது 2 முக்கிய ஹோட்டல்கள் வங்கியால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட அந்த ஹோட்டல்களை, வங்கிகள் முறையாக பராமரிக்கவில்லை. ஏலம் விட நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது, ​​அந்த ஹோட்டல்களின் நீச்சல் குளங்கள், தோட்டங்கள், கட்டடங்கள் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து வருகின்றன.

இதன் காரணமாக 7,8 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான இந்த ஹோட்டல்களை மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது.

கடனில் இருந்து விடுபட முடியாது. எனவே, இவ்விடயத்தில் பொறுப்பானவர்கள் தலையிட்டு அனுராதபுரம் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்களுக்கு நீதி வழங்க வேண்டும்” என டெமியன் பெர்னாண்டோ கேட்டுக் கொண்டார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு அருகில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் நிலவும் தளம்பல் நிலை காரணமாக, நாளை (மே 11) அளவில்...

world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...