tamilnis scaled
இலங்கைசெய்திகள்

சில தனியார் வங்கிகளில் புதிய நடைமுறை

Share

சில தனியார் வங்கிகளில் புதிய நடைமுறை

நாட்டில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி புத்தகம் மூலம் பணம் பெறும் போது சில வங்கிகளினால் மிகவும் நியாயமற்ற முறையில் 50 ரூபாய் அறவிடுவதாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்துஅநீதி இழைக்கப்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

எவ்வித முன்னறிப்புகளுமின்றி இவ்வாறு வங்கி புத்தகம் மூலம் பணம் பெறும் போது தனியார் வங்கிகள் 50 ரூபாய் அறவிடுவதாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அண்மையில் திம்பிரிகசாய பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கியொன்றில் வங்கி புத்தகம் மூலம் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி முகாமையாளரிடம் வினவியுள்ளார்.

இதன்போது, ​​வாடிக்கையாளர்கள் வருவதால் வங்கிக்கு அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதனால் வங்கி, அட்டைகளை பயன்படுத்தி ஏ.ரி.ம் இயந்திரங்களில் பணம் எடுக்கும் நடைமுறையை ஊக்குவிப்பதற்காக பணம் அறிவிடும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக வங்கி முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், 50 ரூபாவை அறவிடுவதற்கு மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளதா என வங்கி முகாமையாளரிடம் வினவியபோது, ​​அவ்வாறான அனுமதி இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....