இலங்கைசெய்திகள்

வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கு ஆபத்தா..!

Share
வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கு ஆபத்தா..!
வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கு ஆபத்தா..!
Share

வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கு ஆபத்தா..!

வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம் பாதுகாப்பானது இல்லை என்ற கரிசனை அர்த்தமற்றது. வைப்புகள் எப்போதும் பாதுகாப்பானவை. அரசாங்கம் ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளை மீறினால் மாத்திரமே அவற்றிற்கு ஆபத்து ஏற்படும் என பொருளாதார நிபுணர் கலாநிதி நிசான் டி மெல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்திற்கு என்ன நடக்குமோ என்ற அச்சம் தேவையற்றது.

வங்கியில் உள்ளவைப்புகளிற்கு பாதிப்பு என்ற அச்சத்திற்கு தீர்வை காணவேண்டும். வங்கியின் வாடிக்கையாளர்கள் மத்தியில் பதற்றநிலை ஏற்பட்டு மக்கள் தங்கள் பணத்தை மீளபெற்றுக்கொள்ள முயலும் சூழ்நிலை உருவாக அனுமதிக்க கூடாது.

அவ்வாறான பதற்றநிலையேற்பட்டால் அது வங்கிகளை பாதிக்கும். அவ்வேளையே வங்கிகள் வீழ்ச்சியடையும். அவ்வாறான அதிர்ச்சி சூழ்நிலை உருவாகும்போது வங்கிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை எவராலும் தடுக்க முடியாது.

வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை உடனடியாக பெற்றுக்கொள்ள முயல்வார்கள். அந்த நிலைமையை கையாள்வது கடினம். அவ்வாறான சூழ்நிலையை நாங்கள் உருவாக்காமலிருப்பது அவசியம். வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம் பாதுகாப்பானது இல்லை என்ற கரிசனை அர்த்தமற்றது.

வைப்புகள் எப்போதும் பாதுகாப்பானவை அரசாங்கம் ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளை மீறினால் மாத்திரமே அவற்றிற்கு ஆபத்து ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...