வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கு ஆபத்தா..!
இலங்கைசெய்திகள்

வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கு ஆபத்தா..!

Share

வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கு ஆபத்தா..!

வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம் பாதுகாப்பானது இல்லை என்ற கரிசனை அர்த்தமற்றது. வைப்புகள் எப்போதும் பாதுகாப்பானவை. அரசாங்கம் ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளை மீறினால் மாத்திரமே அவற்றிற்கு ஆபத்து ஏற்படும் என பொருளாதார நிபுணர் கலாநிதி நிசான் டி மெல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்திற்கு என்ன நடக்குமோ என்ற அச்சம் தேவையற்றது.

வங்கியில் உள்ளவைப்புகளிற்கு பாதிப்பு என்ற அச்சத்திற்கு தீர்வை காணவேண்டும். வங்கியின் வாடிக்கையாளர்கள் மத்தியில் பதற்றநிலை ஏற்பட்டு மக்கள் தங்கள் பணத்தை மீளபெற்றுக்கொள்ள முயலும் சூழ்நிலை உருவாக அனுமதிக்க கூடாது.

அவ்வாறான பதற்றநிலையேற்பட்டால் அது வங்கிகளை பாதிக்கும். அவ்வேளையே வங்கிகள் வீழ்ச்சியடையும். அவ்வாறான அதிர்ச்சி சூழ்நிலை உருவாகும்போது வங்கிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை எவராலும் தடுக்க முடியாது.

வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை உடனடியாக பெற்றுக்கொள்ள முயல்வார்கள். அந்த நிலைமையை கையாள்வது கடினம். அவ்வாறான சூழ்நிலையை நாங்கள் உருவாக்காமலிருப்பது அவசியம். வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம் பாதுகாப்பானது இல்லை என்ற கரிசனை அர்த்தமற்றது.

வைப்புகள் எப்போதும் பாதுகாப்பானவை அரசாங்கம் ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளை மீறினால் மாத்திரமே அவற்றிற்கு ஆபத்து ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...