tamilnaadi 13 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசாங்கத்தை கொண்டு நடத்தப் பணம் இல்லையாம்!

Share

இலங்கை அரசாங்கத்தை கொண்டு நடத்தப் பணம் இல்லையாம்!

அரசாங்கத்தை கொண்டு நடாத்த போதியளவு பணமில்லை என போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு முழுவதிலும் அரசாங்க திறைசேரிக்கு மூன்று ட்ரில்லியன் ரூபா பணம் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவற்றில் இரண்டு ட்ரில்லியன் ரூபா அரசாங்க கடன் செலுத்துகைகளுக்காக செலவிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்குள் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களுக்காக வட்டியாக இரண்டு ட்ரில்லியன் ரூபா செலுத்த நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே செலவுகளை மேற்கொள்வதற்கு கடன் பெற்றுக்கொள்ள நேரிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகைகளை உடன்படிக்கை அடிப்படையில் செலுத்த தவறினால் நாட்டை நடத்திச் செல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...