7 52
இலங்கைசெய்திகள்

பந்துல குணவர்தன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

Share

தனது வாழ்க்கையில் முதல் முறையாக அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்காக வருகை தந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சந்தேகத்திற்குரிய மருந்துப் பொருள் கொள்வனவு தொடர்பான விசாரணைக்கு இன்று(28.11.2024) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில், கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானங்களுக்கு எதிராக தற்போது விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

இதன்படி கடந்த சில நாட்களாக, கடந்த அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பல அமைச்சரவை அமைச்சர்கள், வாக்குமூலங்களை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...