tamilni 168 scaled
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் தொடருந்து சேவை

Share

அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் தொடருந்து சேவை

இன்று (12) நள்ளிரவு முதல் தொடருந்து சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், இது தொடர்பான யோசனை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

இதன்மூலம் நாளை (13.09.2023) முதல் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தொடருந்து இயக்குநர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக பல தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினத்தின் (12.09.2023) இதுவரையான 10 இற்கும் அதிகமான அலுவலக மற்றும் ஏனைய தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் சேவைகளை பெற்றுக் கொள்வதில் மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.

சுமார் 5 வருடங்களாக நடைபெறாத தரம் உயர்வை விரைவுபடுத்துமாறு விடப்பட்ட கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்றிரவு தொடருந்து இயக்குநர்கள் சங்கத்திற்கும், தொடருந்து முகாமையாளருக்கும் இடையில் அவசர பேச்சுவார்த்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தமையினால், நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு தொடருந்து இயக்குநர்கள் சங்கம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....