rtjy 272 scaled
இலங்கைசெய்திகள்

ஹோட்டல் அறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்!

Share

ஹோட்டல் அறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்!

பண்டாரவளை நகரில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் மனைவியைக் கொலை செய்துவிட்டு தலைமறைவான சந்தேகநபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் விஷம் அருந்தியதாக கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களனி – கோணவலயை சேர்ந்த 50 வயதான நபரொருவர் (23) ஹோட்டலுக்கு வருகை தந்துள்ளதுடன், மனைவியை ஹோட்டலுக்கு அழைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து சந்தேகநபர் அவசரமாக ஹோட்டலில் இருந்து வௌியேறியதால், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் இருவர் அறையை சோதனையிட்ட போது குறித்த பெண் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதன்போது ஹோட்டலிலிருந்து தப்பிச்சென்ற சந்தேகநபர் கடிதமொன்றினை எழுதிவைத்து தலைமறைவாகியிருந்த நிலையில்,பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் குறித்த நபர் விஷம் அருந்தியமை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது பொலிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த நபர் விசாரணைக்காக பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளார்.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...